தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் வில்லனாக நடித்திருந்த மிஷ்கின், தற்போது விஜய்யின் லியோ படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, லியோ திரைப்படம் பார்த்துவிட்டீர்களா என்ற கேள்விக்கு அளித்த பதிலால் விஜய் ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர். அவர் கூறுகையில், ‛‛தம்பி விஜய் லியோ திரைப்படத்தை பார்த்துவிட்டான், நன்றாக வந்துள்ளது என்று கூறியுள்ளான்'' என்றார்.
விஜய்யை தளபதி என்றே அழையுங்கள் என விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அதன் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்ட நிலையில், ஒருமையில் மிஷ்கின் பேசியதால், ரசிகர்கள் கோபமடைந்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இயக்குனர் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பரப்பி வருகின்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.