இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஆர்.கே.சுரேஷ் நடித்த 'பில்லா பாண்டி' படத்தை தயாரித்தவர் கே.சி.பரத். அதன் பின் நடிகராகி புலிக்குத்தி பாண்டி, அங்காரகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது அவரே கதையின் நாயகனாக நடித்து, தயாரிக்கும் படம் 'கருப்பு பெட்டி'. இதை எஸ்.பி.ஜனநாதனிடம் உதவியாளராக இருந்த எஸ்.தாஸ் இயக்குகிறார். மலையாள நடிகை தேவிகா வேனு நாயகியாக நடிக்கிறார். இவர் தவிர சரவண சக்தி, தர்மேஷ், மிதுன் சக்ரவர்த்தி, நிஷா, கீர்த்தி, அனிதா உள்பட பலர் நடித்துள்ளனர். அருண் இசை அமைத்துள்ளார், மோசஸ் டேனியல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் தாஸ் கூறும்போது: இது காமெடி கலந்த சீரியசான படம். படத்தின் நாயகனுக்கு தான் காணும் கனவுகளை டைரியில் எழுதி வைக்கும் வழக்கம் இருக்கிறது. ஒரு நாள் அதனை அவரது மனைவி படித்து விடுகிறார். அதில் எழுதியிருப்பது அனைத்தும் உண்மை என்ற கருதும் அவர், கணவனை வெறுப்பதோடு அவர் மீது போலீசில் புகாரும் கொடுக்கிறார். தான் எழுதியது அனைத்தும் தான் கண்ட கனவுதான் நிஜமல்ல என்பதை நாயகன் எப்படி நிரூபிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. என்றார்.