ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
திருமணம், விவாகரத்துக்கு பிறகு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலில் மொத்த கிளாமரையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கிறங்கடித்தார் சமந்தா. அதன் பிறகு அவர் கதையின் நாயகியாக நடித்த இரண்டு படங்கள் அதிர்ச்சி தோல்வியாக அமைந்த நிலையில், விஜய் தேவர கொண்டாவுடன் இணைந்து அவர் நடித்து செப்டம்பர் ஒன்றாம் தேதி திரைக்கு வந்த குஷி படம் வெற்றி பெற்றது. தற்போது நடிப்புக்கு பிரேக் கொடுத்திருக்கிறார். இந்த நேரத்தில் அடுத்தபடியாக சமந்தா ஆந்திர அரசியலில் என்ட்ரி கொடுக்கப் போவதாகவும், ஒரு பிரபல கட்சியில் அவர் இணையப் போவதாகவும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது சமந்தா சொல்லும் போது தான் தெரியவரும். ஏற்கனவே விஜயசாந்தி, ரோஜா, குஷ்பூ, நமீதா உள்ளிட்ட பல நடிகைகள் அரசியலில் உள்ள நிலையில், சமந்தாவும் அந்த பட்டியலில் இடம் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.