விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' | 5 ஆண்டுகளாக உருவான 'சையாரா' பாடல்கள் | தக் லைப் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி |
தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34வது படத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். பிரியா பவானி சங்கர், யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக இந்த படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 29) விஷால் தனது 46வது பிறந்த நாளை படக்குழுவினர்கள் உடன் கொண்டாடியுள்ளார். இதோடு இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது. மேலும், "தமிழகத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஊர் காரைக்குடி. இங்கு படப்பிடிப்பில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது" என தனது தெரிவித்துள்ளார் விஷால் .