தி கேர்ள் பிரண்ட் படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா | பைட்டர் படத்திலிருந்து ஹிர்த்திக் போஸ்டர் வெளியானது | ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ | ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி | அமீர்கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித் | அம்மா ஸ்ரீதேவியின் 10 வருட பழைய ஆடையில் மகள் குஷி | நிவின்பாலி - பிரணவை ஒன்றிணைத்த வினீத் சீனிவாசன் | நடிப்பு சொல்லிக் கொடுத்த குருவின் பிறந்தநாளில் பிரபாஸ் அளித்த பரிசு | நடிகை லேனாவுக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் மத்தியில் குரல் கொடுத்த சுரேஷ்கோபி | பெங்களூருக்கு வந்த நானியை வரவேற்று உபசரித்த சிவராஜ்குமார் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரது 21 வது படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படக்குழுவினர் சென்னை திரும்பி இருக்கிறார்கள். ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் இந்த படத்தில் போர்க்களம் சம்பந்தப்பட்ட காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக இரண்டாம் கட்ட படிப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ள நிலையில், சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகிறது. அதையடுத்து மீண்டும் காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அப்போது கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி படமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.