20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம், வரும் செப்டம்பர் 10ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சிமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை, தணிக்கை செய்யப்பட்ட வரவு - செலவு கணக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. வக்கீல் மற்றும் கணக்கு தணிக்கையாளர் அறிமுகமும் நடைபெறுகிறது. நடிகர் சங்க கட்டட நிதி மற்றும் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்து கார்த்தி பேசவுள்ளார். கடந்த கால நிர்வாக செயல்பாடுகள், புதிய கட்டடம் கட்டி முடிப்பதற்கு நிதி திரட்டுதல் குறித்து விஷால் கருத்துகளை முன்வைத்து பேசுகிறார்.
நடிகர் சங்க கட்டடம் பாதி கட்டப்பட்ட நிலையில் கட்டுமான பணிகள் முழுமையடையாமல் உள்ளது. இதற்கு இன்னும் ரூ.30 கோடி நிதி தேவை என்று கடந்த பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இந்த கூட்டத்தில் கட்டடம் கட்ட தேவையான மீதமுள்ள நிதி திரட்டுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.