சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம், வரும் செப்டம்பர் 10ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சிமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை, தணிக்கை செய்யப்பட்ட வரவு - செலவு கணக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. வக்கீல் மற்றும் கணக்கு தணிக்கையாளர் அறிமுகமும் நடைபெறுகிறது. நடிகர் சங்க கட்டட நிதி மற்றும் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்து கார்த்தி பேசவுள்ளார். கடந்த கால நிர்வாக செயல்பாடுகள், புதிய கட்டடம் கட்டி முடிப்பதற்கு நிதி திரட்டுதல் குறித்து விஷால் கருத்துகளை முன்வைத்து பேசுகிறார்.
நடிகர் சங்க கட்டடம் பாதி கட்டப்பட்ட நிலையில் கட்டுமான பணிகள் முழுமையடையாமல் உள்ளது. இதற்கு இன்னும் ரூ.30 கோடி நிதி தேவை என்று கடந்த பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இந்த கூட்டத்தில் கட்டடம் கட்ட தேவையான மீதமுள்ள நிதி திரட்டுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.