2வது திருமண வதந்தியால் மனவேதனை: நடிகை மீனா | ஆயுத பூஜைக்கு வெளியாகிறது சூர்யாவின் ‛கருப்பு' படத்தின் முக்கிய அப்டேட் | ஹுமா குரோசிக்கு காதலருடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததா? | எப்போது திருமணம்? ஜான்வி கபூர் அளித்த பதில் | 25 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகும் ‛குஷி' | ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ‛ஹிட்டன் கேமரா' | 100 சதவீதம் விஜய்யிசம் ; ‛ஜனநாயகன்' குறித்து படத்தொகுப்பாளர் பகிர்ந்த தகவல் | படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து மம்முட்டியின் ‛டர்போ' புரோமோ பாடல் ரிலீஸ் ; ரசிகர்கள் கிண்டல் | ‛உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பை நிறைவு செய்த ராஷி கண்ணா | தாமதமாக சொன்ன ஓணம் வாழ்த்து ; வருத்தம் தெரிவித்த அமிதாப் பச்சன் |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம், வரும் செப்டம்பர் 10ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சிமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை, தணிக்கை செய்யப்பட்ட வரவு - செலவு கணக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. வக்கீல் மற்றும் கணக்கு தணிக்கையாளர் அறிமுகமும் நடைபெறுகிறது. நடிகர் சங்க கட்டட நிதி மற்றும் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்து கார்த்தி பேசவுள்ளார். கடந்த கால நிர்வாக செயல்பாடுகள், புதிய கட்டடம் கட்டி முடிப்பதற்கு நிதி திரட்டுதல் குறித்து விஷால் கருத்துகளை முன்வைத்து பேசுகிறார்.
நடிகர் சங்க கட்டடம் பாதி கட்டப்பட்ட நிலையில் கட்டுமான பணிகள் முழுமையடையாமல் உள்ளது. இதற்கு இன்னும் ரூ.30 கோடி நிதி தேவை என்று கடந்த பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இந்த கூட்டத்தில் கட்டடம் கட்ட தேவையான மீதமுள்ள நிதி திரட்டுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.