ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சூது கவ்வும் திரைப்படம் மூலம் கவனிக்கத்தக்க நடிகராக அறிமுகமான அசோக் செல்வன், இப்போது தமிழ் சினிமாவில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான போர் தொழில் படத்தின் மிகப்பெரிய வெற்றி மூலம் அசோக் செல்வன் மார்க்கெட் இன்னும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் அசோக் செல்வனுக்கும், நடிகர் அருண்பாண்டியன் மகளான நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது.
இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் என்கிற படத்தில் நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இவர்களது திருமண பத்திரிக்கை தற்போது சோசியல் மீடியாவில் லீக் ஆகி உள்ளது.
இதன்படி இவர்களது திருமணம் வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி திருநெல்வேலி இட்டேரியில் உள்ள சேது அம்மாள் பண்ணை என்கிற இடத்தில் காலை 6 முதல் 7 மணிக்குள் நடைபெற இருப்பதாக அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அநேகமாக செப்டம்பர் 17ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய அளவில் திருமண வரவேற்பை நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.