ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
நடிகர் ரஜினி இமயமலை ஆன்மிக பயணத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு சென்றார். அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷை சந்தித்து பேசினார். கவர்னர் ஆனந்திபென் படேலையும் சந்தித்தார். பின்னர் அயோத்திக்கு சென்ற அவர் அனுமன்கர்கி கோயிலுக்கு சென்று வழிபட்டார். ராமர் கோயில் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்.
இந்தநிலையில் லக்னோ ராணுவ தலைமையத்திற்கு ரஜினியை அழைத்து சென்று ராணுவ அதிகாரிகள் கவுரவித்தனர். இந்திய ராணுவத்தின் முதன்மை கமாண்டிங் அதிகாரி லெப்டினெண்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், ராணுவ அதிகாரிகளுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.