அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
நடிகர் ரஜினி இமயமலை ஆன்மிக பயணத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு சென்றார். அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷை சந்தித்து பேசினார். கவர்னர் ஆனந்திபென் படேலையும் சந்தித்தார். பின்னர் அயோத்திக்கு சென்ற அவர் அனுமன்கர்கி கோயிலுக்கு சென்று வழிபட்டார். ராமர் கோயில் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்.
இந்தநிலையில் லக்னோ ராணுவ தலைமையத்திற்கு ரஜினியை அழைத்து சென்று ராணுவ அதிகாரிகள் கவுரவித்தனர். இந்திய ராணுவத்தின் முதன்மை கமாண்டிங் அதிகாரி லெப்டினெண்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், ராணுவ அதிகாரிகளுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.