நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் ரஜினி இமயமலை ஆன்மிக பயணத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு சென்றார். அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷை சந்தித்து பேசினார். கவர்னர் ஆனந்திபென் படேலையும் சந்தித்தார். பின்னர் அயோத்திக்கு சென்ற அவர் அனுமன்கர்கி கோயிலுக்கு சென்று வழிபட்டார். ராமர் கோயில் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்.
இந்தநிலையில் லக்னோ ராணுவ தலைமையத்திற்கு ரஜினியை அழைத்து சென்று ராணுவ அதிகாரிகள் கவுரவித்தனர். இந்திய ராணுவத்தின் முதன்மை கமாண்டிங் அதிகாரி லெப்டினெண்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், ராணுவ அதிகாரிகளுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.