‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

சின்னத்திரை பிரபலமான ரேகா நாயர், இரவின் நிழல் படத்தில் நிர்வாண காட்சியில் நடித்ததன் மூலம் வைரலானார். தொடர்ந்து பயில்வான் ரங்கநாதனுடன் பிரச்னை, வீஜே சித்ரா விவகாரம், நிர்வாணம் பற்றிய கருத்து என இவரை சுற்றி சர்ச்சைகள் எழுந்து அடிக்கடி டிரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் தனது கடந்தகால சோக வாழ்க்கை குறித்து பேசியுள்ள ரேகா, ‛‛எனக்கு 17 வயதிலேயே திருமணமாகிவிட்டது. 18 வயதில் எனக்கு மகள் பிறந்தாள். அப்போதே என் கணவர் என்னை விட்டு பிரிந்துவிட்டார். இப்போது எனக்கு 37 வயதாகிறது. 2 வருடங்களுக்கு முன்பு தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன். இந்த 20 வருடத்தில் பல பெரிய மாற்றங்களை என்னிடம் பார்க்கிறேன். வீடு வாங்கிவிட்டேன், 2 கார்கள் வைத்திருக்கிறேன். முடியாது என்பது இந்த உலகத்தில் இல்லை'' என தன் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். இவ்வளவு கஷ்டத்திலும் துணிச்சலுடன் எதிர்நீச்சல் போட்டு சாதித்த ரேகா நாயருக்கு பலரும் தற்போது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.