‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
சின்னத்திரை பிரபலமான ரேகா நாயர், இரவின் நிழல் படத்தில் நிர்வாண காட்சியில் நடித்ததன் மூலம் வைரலானார். தொடர்ந்து பயில்வான் ரங்கநாதனுடன் பிரச்னை, வீஜே சித்ரா விவகாரம், நிர்வாணம் பற்றிய கருத்து என இவரை சுற்றி சர்ச்சைகள் எழுந்து அடிக்கடி டிரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் தனது கடந்தகால சோக வாழ்க்கை குறித்து பேசியுள்ள ரேகா, ‛‛எனக்கு 17 வயதிலேயே திருமணமாகிவிட்டது. 18 வயதில் எனக்கு மகள் பிறந்தாள். அப்போதே என் கணவர் என்னை விட்டு பிரிந்துவிட்டார். இப்போது எனக்கு 37 வயதாகிறது. 2 வருடங்களுக்கு முன்பு தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன். இந்த 20 வருடத்தில் பல பெரிய மாற்றங்களை என்னிடம் பார்க்கிறேன். வீடு வாங்கிவிட்டேன், 2 கார்கள் வைத்திருக்கிறேன். முடியாது என்பது இந்த உலகத்தில் இல்லை'' என தன் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். இவ்வளவு கஷ்டத்திலும் துணிச்சலுடன் எதிர்நீச்சல் போட்டு சாதித்த ரேகா நாயருக்கு பலரும் தற்போது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.