மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு | இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் நிறைவேறாத கனவு |
கடந்த 2008ம் ஆண்டில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் வாரணம் ஆயிரம். அவருடன் சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்டோர் நடித்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். தமிழில் வரவேற்பை பெற்ற இந்த படம் தெலுங்கு பதிப்பில் 'சூர்யா சன் ஆப் கிருஷ்ணன்' என்ற பெயரில் வெளியாகி அங்கும் வரவேற்பைப் பெற்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரீ-ரிலீஸானது. இந்த படத்திற்கு இப்போதும் வரவேற்பு கிடைத்துள்ளது. இன்றைய தலைமுறை இளைஞர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இப்படம் இருதினங்களில் மட்டும் சுமார் ரூ.2 கோடி வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா சன் ஆப் கிருஷ்ணன் மறுவெளியீட்டிற்கு கிடைத்த வரவேற்புக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‛‛இந்த அன்பு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை தருகிறது. படக்குழுவினர், ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள்(ரசிகர்கள்) என்னை பிரமிக்க வைக்கிறீர்கள்'' என குறிப்பிட்டு, தியேட்டரில் ரசிகர்களுக்கு இந்த படத்திற்கு கொடுத்த வரவேற்பு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.