நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த 2008ம் ஆண்டில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் வாரணம் ஆயிரம். அவருடன் சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்டோர் நடித்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். தமிழில் வரவேற்பை பெற்ற இந்த படம் தெலுங்கு பதிப்பில் 'சூர்யா சன் ஆப் கிருஷ்ணன்' என்ற பெயரில் வெளியாகி அங்கும் வரவேற்பைப் பெற்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரீ-ரிலீஸானது. இந்த படத்திற்கு இப்போதும் வரவேற்பு கிடைத்துள்ளது. இன்றைய தலைமுறை இளைஞர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இப்படம் இருதினங்களில் மட்டும் சுமார் ரூ.2 கோடி வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா சன் ஆப் கிருஷ்ணன் மறுவெளியீட்டிற்கு கிடைத்த வரவேற்புக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‛‛இந்த அன்பு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை தருகிறது. படக்குழுவினர், ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள்(ரசிகர்கள்) என்னை பிரமிக்க வைக்கிறீர்கள்'' என குறிப்பிட்டு, தியேட்டரில் ரசிகர்களுக்கு இந்த படத்திற்கு கொடுத்த வரவேற்பு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.