மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ஜூயிட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த படம் '2018' . இப்படம் மலையாள சினிமாவின் அதிக வசூல் செய்த படமாக மாறி சாதனை செய்தது. இதையடுத்து ஜூயிட் ஆண்டனி ஜோசப் மலையாளத்தில் நடிகர் ஆசிப் அலியை வைத்து விரைவில் புதிய படத்தை இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தமிழில் ஒரு புதிய படத்தை ஜூயிட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார் என சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். இதில் ஹீரோவாக நடிகர் விக்ரம் நடிக்கிறார். இது விக்ரமின் 62வது படமாக உருவாகிறது. இந்த நிலையில் விக்ரம் உடன் இணைந்து நடிக்க விஜய் சேதுபதி மற்றும் ராஷ்மிகா மந்தனா என இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.