குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் | போதை பார்ட்டியில் கலந்து கொண்டேனா? : நடிகர் ஸ்ரீகாந்த் விளக்கம் |
தமிழ், தெலுங்கில் இயக்குனராக, நடிகராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமுத்திரக்கனி. தெலுங்கில் பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் நடித்துள்ள 'ப்ரோ' படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இந்த வாரம் ஜுலை 28ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்காக பேட்டிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி.
பேட்டி ஒன்றில் அவர் அடுத்து இயக்க உள்ள படங்கள் பற்றிய தகவலைச் சொல்லியுள்ளார். விரைவில் தமிழில் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம். அடுத்து துல்கர் சல்மான் நடிக்க, ராணா டகுபட்டி தயாரிக்கப் போகும் பான் இந்தியா படம் ஒன்றையும் இயக்க உள்ளாராம். இது பற்றிய அறிவிப்புகள் அடுத்து வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
ராணா டகுபட்டி குடும்பத்தினர் பல ஆண்டு காலமாக திரைப்படத் தயாரிப்பில் உள்ளனர். அவரது தாத்தா ராமா நாயுடு ஆரம்பித்த சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழில் “வசந்த மாளிகை, தனிக்காட்டு ராஜா, மைக்கேல் ராஜ்'' ஆகிய படங்களைத் தயாரித்துள்ளனர். கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான 'ப்ரின்ஸ்' படத்தை இணைந்து தயாரித்தனர். ராணா டகுபட்டி சில பிரம்மாண்டப் படங்களைத் தயாரிக்க உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்துள்ளன.