கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் 'பெருசு' | கார் ரேஸ் : அஜித்திற்கு குவியும் வாழ்த்துகள் | மோகன்லாலை இயக்கும் தமிழ் இயக்குனர் | வெற்றிமாறன் - தனுஷ், மதிமாறன் புகழேந்தி - சூரி : ஒரேநாளில் இரு பட அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் | பிளாஷ்பேக்: கே பாக்யராஜ் என்ற புதிய நாயகனை வார்த்தெடுத்த “புதிய வார்ப்புகள்” | பிரபாஸின் மணப்பெண் இந்த ஊரை சேர்ந்தவர்: நடிகர் ராம்சரண் கொடுத்த 'க்ளூ' | பவன் கல்யாண் பட அக்ரிமெண்டில் சிக்கி பட வாய்ப்புகளை இழந்த நிதி அகர்வால் | உயிரோடு இருப்பேனா என அச்சம் ஏற்பட்டது ; லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்தில் இருந்து தப்பிய ப்ரீத்தி ஜிந்தா | ரஜினியின் பில்லா தோல்வி படமா? - விஷ்ணுவர்தனுக்கு கண்டனம் | நடிகை ஹனிரோஸ் மீதான சர்ச்சை கருத்து.. முன்ஜாமின் விண்ணப்பித்த மீடியா ஆர்வலர் |
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மீனாட்சி சவுத்ரி. பல் மருத்துவம் படித்தவர். மாடலிங் உலகில் அறிமுகமான இவர் 2018ம் ஆண்டு 'மிஸ் இந்தியா' போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் புகழ்பெற்றார். இதன் மூலம் 'இச்சட வாகனமுலு நிலுபரடு' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு 'கிலாடி' படத்தில் நடித்தார். தற்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள 'கொலை' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடிக்கும் இப்படத்தை 'விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி கே.குமார் இயக்கியுள்ளார். வரும் 21ம் தேதி படம் வெளிவருகிறது.
கொலை படத்தில் நடித்திருப்பது பற்றி மீனாட்சி சவுத்ரி கூறியதாவது: முதலில் இந்த கேரக்டரில் நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தமானார். திடீரென்று அவர் விலகியதால் என்னை ஒப்பந்தம் செய்தனர். நான் பல் மருத்துவம் படித்தேன். ஆனால், எந்த மருத்துமனையிலும் பணியாற்றவில்லை. மாடலிங், சினிமா என்று பிசியாகி விட்டேன். நயன்தாரா, திரிஷாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். நானும் அவர்களைப் போல் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிப்பேன். தமிழில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடிக்க விரும்புகிறேன். தற்போது தீவிரமாக தமிழ் கற்று வருகிறேன். தற்போது 'குண்டூர் காரம்' என்ற தெலுங்கு படத்தில் மகேஷ் பாபுவுடன் நடித்து வருகிறேன். என்றார்.