பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகாத்திகேயன் நடித்து வரும் படம் 'அயலான்'. ஏஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. வேற்று கிரக வாசி கதை என்பதால் இப்படத்தில் நிறைய விஎப்எக்ஸ் காட்சிகள் இடம் பெறுகின்றன. அதற்கான வேலைகள் கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது.
படத்தில் சில முக்கிய காட்சிகளின் விஎப்எக்ஸ் வேலைகளுக்காக சென்னையில் மீண்டும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். அதில் நடிகர்கள் யாரும் பங்கு பெறவில்லையாம். சென்னையில் சில பிரபலமான இடங்களைத் தனியாகப் படமாக்கியுள்ளார்கள். அவற்றை வைத்து விஎப்எக்ஸ் காட்சிகள் சிலவற்றை உருவாக்க வேண்டியுள்ளதாம். 'அயலான்' படத்திற்காக உருவாகி வரும் விஎப்எக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' கடந்த வாரம் வெளியானது. அவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத தமிழ்ப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். காஷ்மீரில் அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 'மாவீரன்' பட வெளியீட்டிற்காகக் கடந்த வாரம் படப்பிடிப்பிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் மீண்டும் அப்படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.