ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகிபாபு, மிஷ்கின் நடித்துள்ள படம் 'மாவீரன்'. இந்த படம் நாளை வெளியாக உள்ளது. இந்தநிலையில், இந்த படத்துக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த வழக்கு மனுவில் “மாவீரன் படத்தில் வில்லனாக நடித்துள்ள மிஷ்கின் வரக்கூடிய காட்சிகளில், அவர் சார்ந்துள்ள கட்சியின் கொடியாக, எங்கள் கட்சியின் கொடியை பயன்படுத்தியுள்ளனர். அந்த காட்சியை நீக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. “இளம் காக்கி, மஞ்சள், இளம் காக்கி என்கிற அடுக்கில்தான் படத்தில் வரும் காட்சிகளில் கொடி வடிவமைக்கப்பட்டு உள்ளது. அது மனுதாரர் கட்சியின் கொடி வண்ணம் இல்லை. படம் 750 தியேட்டர்களில் வெளியாக உள்ளன. இந்த காட்சிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றால், 10 முதல் 20 நாட்கள் ஆகும். எனவே, தடை ஏதேனும் விதித்தால் பெரும் நிதி இழப்பு ஏற்படும்” தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து “மாவீரன் படம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. இதற்காக தயாரிப்பு தரப்பு நிறைய செலவு செய்திருக்கிறது. எனவே படத்திற்கு தடைவிதிக்க முடியாது. படத்தில் பயன்படுத்தப்படும் கொடி எந்த அரசியல் கட்சியையும் குறிக்காது என்று படத்தின் துவக்கத்திலும், முடிவிலும் 10 விநாடிகள் வரும் வகையில் 'பொறுப்பு துறப்பு' வெளியிட வேண்டும். ஓடிடி தளத்தில் வெளியிடும்போது சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கிய பிறகே வெளியிட வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.