பிளாஷ்பேக்: வட்டார மொழி பேசி, வாகை சூடிய முதல் தமிழ் திரைப்படம் “மக்களைப் பெற்ற மகராசி” | சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் | ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சிம்பு | மண்டாடி படத்தில் படகு ரேஸ் வீரராக நடிக்கும் சூரி | 'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு |

1978ம் ஆண்டில் கே.பாலசந்தர் இயக்கிய அவள் அப்படித்தான் என்ற படத்தில் அறிமுகமானவர் சரிதா. அதன்பிறகு தப்பு தாளங்கள், நூல் வேலி, பொண்ணு ஊருக்கு புதுசு, வண்டி சக்கரம் என ஏராளமான படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் டப்பிங் குரல் கொடுப்பதில் கவனத்தை திருப்பிய சரிதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் சரிதா அளித்த ஒரு பேட்டியில், அடுத்தடுத்து சினிமாவில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். குறிப்பாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தை பார்த்தேன். மிகச் சிறப்பாக அந்த படத்தை அவர் இருக்கி இருந்தார். அதையடுத்து அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். அதோடு உங்களது இயக்கத்தில் நடிப்பதற்கு எனக்கு ஆசையாக உள்ளது என்றும் தெரிவித்தேன். அப்போது அவர் கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் என்று கூறியதோடு, என்னுடைய அம்மாவிற்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அவர் உங்களது ரசிகை என்று கூறினார் என அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் நடிகை சரிதா.




