இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு |
1978ம் ஆண்டில் கே.பாலசந்தர் இயக்கிய அவள் அப்படித்தான் என்ற படத்தில் அறிமுகமானவர் சரிதா. அதன்பிறகு தப்பு தாளங்கள், நூல் வேலி, பொண்ணு ஊருக்கு புதுசு, வண்டி சக்கரம் என ஏராளமான படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் டப்பிங் குரல் கொடுப்பதில் கவனத்தை திருப்பிய சரிதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் சரிதா அளித்த ஒரு பேட்டியில், அடுத்தடுத்து சினிமாவில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். குறிப்பாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தை பார்த்தேன். மிகச் சிறப்பாக அந்த படத்தை அவர் இருக்கி இருந்தார். அதையடுத்து அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். அதோடு உங்களது இயக்கத்தில் நடிப்பதற்கு எனக்கு ஆசையாக உள்ளது என்றும் தெரிவித்தேன். அப்போது அவர் கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் என்று கூறியதோடு, என்னுடைய அம்மாவிற்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அவர் உங்களது ரசிகை என்று கூறினார் என அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் நடிகை சரிதா.