இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் |
1978ம் ஆண்டில் கே.பாலசந்தர் இயக்கிய அவள் அப்படித்தான் என்ற படத்தில் அறிமுகமானவர் சரிதா. அதன்பிறகு தப்பு தாளங்கள், நூல் வேலி, பொண்ணு ஊருக்கு புதுசு, வண்டி சக்கரம் என ஏராளமான படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் டப்பிங் குரல் கொடுப்பதில் கவனத்தை திருப்பிய சரிதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் சரிதா அளித்த ஒரு பேட்டியில், அடுத்தடுத்து சினிமாவில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். குறிப்பாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தை பார்த்தேன். மிகச் சிறப்பாக அந்த படத்தை அவர் இருக்கி இருந்தார். அதையடுத்து அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். அதோடு உங்களது இயக்கத்தில் நடிப்பதற்கு எனக்கு ஆசையாக உள்ளது என்றும் தெரிவித்தேன். அப்போது அவர் கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் என்று கூறியதோடு, என்னுடைய அம்மாவிற்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அவர் உங்களது ரசிகை என்று கூறினார் என அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் நடிகை சரிதா.