இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு |
தமிழ்த் திரையுலகில் 80களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சரிதா. அந்த கால கட்டத்திலேயே மற்ற நடிகைகளைப் போல அல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்கள் பலவற்றில் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர். இந்தக் கால ரசிகர்கள் இவர் யார் என்று கேட்டால், 'பிரண்ட்ஸ்' படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்தவர் என்று சொன்னால் தெரிந்துவிடும்.
கடந்த 35 வருடங்களில் தமிழில் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். கடைசியாக 2006ல் வெளிவந்த 'ஜுன் ஆர்' படத்தில் நடித்தார். 2013ல் வெளிவந்த 'சிலோன்' என்ற படத்திலும் நடித்திருந்தார். திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட அந்தப் படம் இங்கு தியேட்டர்களில் வந்து போன சுவடு தெரியாமல் போனது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது 'மாவீரன்' படததில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சரிதா. இது பற்றிய அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரம்பமாகி உள்ளது.