பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் |
மதுமிதா இயக்கிய 'மூணே மூணு வார்த்தை' படத்தின் மூலம் அறிமுகமானவர் தர்ஷனா ராஜேந்திரன். அதன் பிறகு கவண், இரும்புதிரை, தீவிரம் படங்களில் நடித்தார். தமிழில் சரியான வாய்ப்புகள் இன்றி மலையாளத்திற்கு சென்றவர் அங்கு முன்னணி நடிகை ஆனார். இதுதவிர வெப் தொடரிலும் நடித்துள்ளார். இப்போது தெலுங்கில் அறிமுகமாகிறார்.
பிரவீன் கண்ட்ரேகுலா இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் இன்னொரு நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. தர்ஷனா ராஜேந்திரன் நடிகை என்பதுடன் நல்ல பாடகியாகவும் இருக்கிறார். மாயநதி, சர்காஸ் சிர்கா 2020, ஹிருதயம், ஜெய ஜெய ஜெய ஜெயஹே போன்ற படங்களில் பாடியுள்ளார். விரைவில் தமிழ் படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.