ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சமீபத்தில் மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த படம் ‛2018'. கேரளாவில் பெய்த பெரு மழை வெள்ளம் மற்றும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த இப்படம் மலையாள சினிமாவின் அதிக வசூல் செய்த படமாக மாறி சாதனை செய்தது.
இதையடுத்து அவர் அடுத்து இயக்கும் படத்தின் அறிவிப்பிற்காக சினிமா ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழும் லைகா புரொடக்சன்ஸ், ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கும் அடுத்த படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால், இந்த படத்தில் யார் ஹீரோ என அறிவிக்கவில்லை.
சமீபத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நிவின் பாலி, கிச்சா சுதீப் ஆகியோரை சந்தித்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் ஜூட் ஆண்டனி ஜோசப். இதனால் இவரின் அடுத்தபடம் இவர்கள் கூட்டணியில் உருவாகும் படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.




