பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
தமிழ் சினிமாவில் பல முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியவர் ரவீணா ரவி. தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் கதாநாயகியாகவும் அறிமுகமானார். அதன்பின் சில படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளியான 'லவ் டுடே' படத்தில் நாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாகவும், யோகி பாபுவின் மணப் பெண்ணாகவும் நடித்துள்ளார்.
நேற்று முன்தினம் வெளியான 'மாமன்னன்' படத்தில் படத்தின் வில்லனான பகத் பாசில் மனைவியாக நடித்துள்ளார். படத்தில் சில காட்சிகளில் மட்டுமே இருக்கும் சிறிய கதாபாத்திரம். ஆனால், 'டப்பிங்' உலகில் கதாநாயகியான அவருக்கே படத்தில் ஒரு வசனம் கூட வைக்கவில்லை. படத்தில் அவருடைய குரலைக் கேட்கவே முடியாது. இது பற்றி சமூக வலைத்தளங்களிலும் பலர் கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் ரவீணா ரவி, “இந்தப் படத்தில் நான் பகத் பாசிலின் ஜோடியாக நடித்துள்ளேன். குறைவான நேரம்தான் திரையில்… வசனங்களும் கிடையாது, இருந்தாலும் நட்சத்திர நடிகர்களுடன் நடித்தது எனக்கு ஆசீர்வாதம், திறமையான குழுவினர், ஏஆர் ரகுமான் இசை,” என இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு ஆகியோரையும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.