ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. சூர்யா இதுவரை நடித்த படங்களில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிறது. இதில் சூர்யா 10க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் தற்போது கங்குவா படத்தின் பாடல் காட்சி ஒன்று கொடைக்கானலில் படமாக்கப்பட்டு உள்ளது. சூர்யாவுடன் இணைந்து 500க்கும் அதிகமான நடன கலைஞர்கள் இடம் பெற்ற இந்த பாடல் காட்சிக்கு ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து என்ற பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற பாட்டுக்கு நடனம் அமைத்தவர், சூர்யா பட பாடலுக்கும் நடனம் அமைத்திருப்பதால் இந்த பாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.