கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு |
சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. சூர்யா இதுவரை நடித்த படங்களில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிறது. இதில் சூர்யா 10க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் தற்போது கங்குவா படத்தின் பாடல் காட்சி ஒன்று கொடைக்கானலில் படமாக்கப்பட்டு உள்ளது. சூர்யாவுடன் இணைந்து 500க்கும் அதிகமான நடன கலைஞர்கள் இடம் பெற்ற இந்த பாடல் காட்சிக்கு ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து என்ற பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற பாட்டுக்கு நடனம் அமைத்தவர், சூர்யா பட பாடலுக்கும் நடனம் அமைத்திருப்பதால் இந்த பாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.