திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கன்னட சினிமாவை சேர்ந்த இளம் நடிகர் சூரஜ் குமார்(24). கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் உறவினரான இவர் மைசூரில் இருந்து ஊட்டிக்கு பைக்கில் சென்றுள்ளார். மைசூர் - குண்ட்லுப்பேட்டை நெடுஞ்சாலையில் பேகுர் என்ற இடம் அருகே டிராக்டரை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், மைசூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இவரது உயிரை காப்பாற்றும் பொருட்டு பலத்த காயமடைந்த அவரின் வலது காலை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.
சூரஜ் குமார் சினிமாவிற்காக தனது பெயரை துருவன் என மாற்றினார். அவர் நடித்துள்ள 'பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா' என்ற படம் சில பிரச்னைகளால் ரிலீஸாவதில் தாமதமாகி உள்ளது. அடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த சூழலில் அவர் கால்களை இழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் கன்னட திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.