25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
ஆருத்ரா கோல்ட் மோசடி விவகாரத்தில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இந்த நிறுவனத்திடம் இருந்து 15 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்திருப்பதாக அவர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடத்தில் அந்த நிறுவனத்தைச் சார்ந்த ரூசோ என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதோடு, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 500 பேர்கள் இடத்தில் சம்மன் அனுப்பி நடத்திய விசாரணையில், அவர்களிடத்தில் இருந்து 800 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் ஆருத்ரா மோசடி விவகாரம் அம்பலத்துக்கு வந்த போது அது சம்பந்தப்பட்ட பலர் தலைமறைவாகிவிட்ட நிலையில், நடிகர் ஆர்.கே .சுரேஷ் கடந்த ஐந்து மாதங்களாக நாடு திரும்பாமல் வெளிநாட்டில் இருந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.