இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கோபிசந்த், ராஷி கண்ணா நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான 'ஜில்' என்ற தெலுங்கு படம் மூலம் நடிகரானவர் கபீர் துஹான் சிங். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'வேதாளம்' படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். வேதாளத்தை அடுத்து றெக்க, காஞ்சனா 3, அருவம், ஆக்ஷன், தெற்கத்தி வீரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது மாராத்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
கபீர் துஹான் சிங்கிற்கும், அவரது உறவுக்கார பெண்ணான ஹரியானாவை சேர்ந்த ஆசிரியை சீமா சாஹலுக்கும் திருமணம் நடந்தேறியுள்ளது. டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இவர்களது திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
திருமண படங்களை வெளியிட்டுள்ள கபீர் சிங் “இது காதல் திருமணம் அல்ல, பெரியவர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். எனது குடும்பம் பெரியது. அதனை தலைமையேற்று கவனித்துக் கொள்ளவும், எனது தொழிலை புரிந்து கொண்டு எனக்கு துணையாக இருக்கவும் ஒரு பெண்ணை விரும்பினேன். அப்படியொரு பெண்ணை எனக்காக தேர்வு செய்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.