தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் |

சேலம் அருகே ஏத்தாப்பூரில் உள்ள, 146 அடி உயர முருகன் சுவாமியை, நடிகர் யோகிபாபு தரிசித்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஏத்தாப்பூரில் முத்துமலை முருகன் கோவில் உள்ளது. அங்கு யோகிபாபு, அவரது குடும்பத்தினருடன் வந்தார். அவர், மனைவி மஞ்சுபார்கவி, 2 வயது மகன் விசாகன், 7 மாத பெண் குழந்தை பரணிகார்த்திகா ஆகியோர், மூலவர் முருகன் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து கோவிலை சுற்றி வலம் வந்து தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, 146 அடி உயர முருகன் சிலை அருகே உள்ள வேல் சிலைக்கு, நடிகர் யோகிபாபு குடும்பத்தினருடன், பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டார். கோவிலுக்கு வந்த பக்தர்களுடன், யோகிபாபு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.