காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் | 'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர் |
சேலம் அருகே ஏத்தாப்பூரில் உள்ள, 146 அடி உயர முருகன் சுவாமியை, நடிகர் யோகிபாபு தரிசித்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஏத்தாப்பூரில் முத்துமலை முருகன் கோவில் உள்ளது. அங்கு யோகிபாபு, அவரது குடும்பத்தினருடன் வந்தார். அவர், மனைவி மஞ்சுபார்கவி, 2 வயது மகன் விசாகன், 7 மாத பெண் குழந்தை பரணிகார்த்திகா ஆகியோர், மூலவர் முருகன் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து கோவிலை சுற்றி வலம் வந்து தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, 146 அடி உயர முருகன் சிலை அருகே உள்ள வேல் சிலைக்கு, நடிகர் யோகிபாபு குடும்பத்தினருடன், பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டார். கோவிலுக்கு வந்த பக்தர்களுடன், யோகிபாபு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.