'ஜனநாயகன்' தணிக்கை தாமதம், நீதிமன்றத்தில் வழக்கு, இன்று மதியம் விசாரணை | பைரசிகளைத் தடுக்க தெலுங்கு பிலிம் சேம்பர், தெலுங்கானா போலீஸ் புதிய ஒப்பந்தம் | 'புஷ்பா 2' சாதனையை மிஞ்சப் போகும் 'துரந்தர்' | வீட்டு பூஜையில் அருள் வந்து ஆடிய சுதா சந்திரன் | அர்த்தமுள்ள கதைகளை தேடும் தீப்ஷிகா | தெலுங்கில் அறிமுகமாகும் இந்திய அழகி | அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுப்பது அவசியம்: விஜய்சேதுபதி | பிளாஷ்பேக்: சென்சாரில் சிக்கிய சோ படம் | பிளாஷ்பேக்: 'தெனாலிராமன்' சிவாஜியை கிண்டல் செய்த கண்ணதாசன் | 'ஜனநாயகன், பராசக்தி' டிக்கெட் புக்கிங் நிலவரம் எப்படி |

தெலுங்கு முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யாவின் சமீபத்திய படங்கள் தோல்வி அடைந்து வருகிறது. அவர் சமந்தாவை பிரிந்த பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். கடைசியாக நடித்த தேங்க் யூ, கஸ்டடி படங்கள் தோல்வியைச் சந்தித்தன. இதில் 'கஸ்டடி' படம் மூலம் மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழுக்கு வந்தார். அதுவும் ஏமாற்றத்தில் முடிந்தது.
தற்போது 'கார்த்திகேயா' படங்களை இயக்கிய சந்து மொண்டேட்டி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது அவர் நீக்கப்பட்டு கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
“நாக சைதன்யா படத்தில் நடிக்க தொடக்கநிலை பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடந்தது, ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை” என்று அனுபமா தரப்பு கூறுகிறது.