ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் |
கடந்தாண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் அவ்வப்போது தனது மகன்களின் புகைப்படத்தை வெளியிட்டு வந்த விக்னேஷ் சிவன் சமீபத்தில் தங்களது முதல் திருமணநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய போட்டோவை பகிர்ந்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் தனது மகன்களுடன் தந்தையர் தினத்தை கொண்டாடி இருக்கிறார். தனது இரண்டு மகன்களையும் இரண்டு கைகளிலும் ஏந்தியபடி அவர்களின் முகத்தை காண்பிக்காமல் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அதோடு அந்த அரை முழுக்க பலூன்களும், வண்ண விளக்குகளும் ஜொலிக்கிறது. மேலும், வாழ்க்கை என்பது மிகவும் அழகானது. அனைவருக்கும் என்னுடைய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள். அதிகம் புகழப்படாத உண்மையான ஹீரோக்கள் தந்தையர்கள் என்றும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.
அதேபோல் இயக்குனர் அட்லி - பிரியா தம்பதியினரும் தங்களது மகனுடன் தந்தையர் தினத்தை கொண்டாடி இருக்கிறார்கள். தனது கையில் மகனை ஏந்தியபடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் அட்லி.