ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் |
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப்அலிகான் மற்றும் பலர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் என்றுதான் இப்படத்தைப் பற்றி அனைவரும் பேசினார்கள், எழுதினார்கள். ஆனால், படத்தைப் பார்த்த பின் சில பல சர்ச்சை எழுந்ததால் இது குறித்து படத்தின் எழுத்தாளர் மனோஜ் முன்தஷிர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.
“படத்தின் பெயர் 'ஆதிபுருஷ்'. நான் முன்பும் சொன்னேன், இப்போது மீண்டும் சொல்கிறேன், நாங்கள் ராமாயணத்தை எடுக்கவில்லை. இதைப் படமாக்க அது எங்களைத் தூண்டியுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் 'பொறுப்பு துறப்பு' என்று இதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளோம். இப்படத்திற்கு 'ஆதிபுருஷ்' என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக 'ராமாயண்' எனப் பெயர் வைத்திருந்தால் எங்களுக்கு மார்க்கெட்டிங் செய்வதற்கும் சுலபமாக இருந்திருக்கும். ராமாயணத்தின் 'யுத்த காண்டம்' பகுதியை மட்டும் படத்தில் சித்தரித்துள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.
மனோஜின் இந்த பேட்டியும், கருத்தும் மீண்டும் ஒரு வாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.