ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு நடிகையான ஈஷா ரெப்பா 2016ம் ஆண்டு 'ஓய்' என்ற தமிழ் படத்தில் நடித்தார். தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார். விக்ரம் பிரபு நடிக்கும் பெயரிடப்படாத படத்தை லெமன் லீப் கிரியேஷன் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் யோகி பாபு, லக்ஷ்மி மேனன் நடிக்கும் 'மலை', அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடிக்கும் 'ப்ளூ ஸ்டார்' படங்களை தற்போது தயாரித்து வருகிறது.
இயக்குநர்கள் சுசீந்திரன் மற்றும் சற்குணம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரமேஷ் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இதில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ஈஷா ரெப்பா நடிக்கிறார். 'பர்மா' படத்தில் நாயகனாக நடித்த மைக்கேல் தங்கதுரை முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்க உள்ள படத்திற்கு, ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை காளிகாம்பாள் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.