பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
தெலுங்கு நடிகையான ஈஷா ரெப்பா 2016ம் ஆண்டு 'ஓய்' என்ற தமிழ் படத்தில் நடித்தார். தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார். விக்ரம் பிரபு நடிக்கும் பெயரிடப்படாத படத்தை லெமன் லீப் கிரியேஷன் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் யோகி பாபு, லக்ஷ்மி மேனன் நடிக்கும் 'மலை', அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடிக்கும் 'ப்ளூ ஸ்டார்' படங்களை தற்போது தயாரித்து வருகிறது.
இயக்குநர்கள் சுசீந்திரன் மற்றும் சற்குணம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரமேஷ் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இதில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ஈஷா ரெப்பா நடிக்கிறார். 'பர்மா' படத்தில் நாயகனாக நடித்த மைக்கேல் தங்கதுரை முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்க உள்ள படத்திற்கு, ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை காளிகாம்பாள் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.