ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
'பருத்தி வீரன்' படத்தில் அறிமுகமான கார்த்திக்கு இரண்டாவதாக வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்' படம் பெயரை வாங்கித் தந்தாலும் வெற்றியை வாங்கித் தரவில்லை. அதற்கடுத்து லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடித்து 2010ல் வெளிவந்த 'பையா' படம் அவருக்கு நல்லதொரு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. அந்தப் படத்தில்தான் மாடர்ன் கார்த்தியைப் பார்க்க முடிந்தது. ஒரு சாலைப் பயணக் கதையாக அமைந்த அப்படத்தின் வெற்றிக்கு யுவன் இசையில் வெளிவந்த பாடல்களும் முக்கிய காரணமாக அமைந்தது.
கடந்த சில வாரங்களாக 'பையா' படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய சில தகவல்கள் வெளிவந்தது. அப்படத்தில் ஆர்யா நடிக்க உள்ளதாகவும் சொன்னார்கள். ஆனால், இப்போது 'பையா' கூட்டணியே மீண்டும் இணைய உள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் கார்த்தியை சந்தித்து 'பையா 2' கதையை லிங்குசாமி சொன்னதாகவும், அவருக்கு கதை பிடித்துப் போய் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
லிங்குசாமி இயக்கத்தில் 'பையா' படத்திற்குப் பிறகு கடந்த 13 வருடங்களில் வெளிவந்த 'வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2, த வாரியர்' ஆகிய நான்கு படங்கள் வெளிவந்தன. இவற்றில் வேட்டை படம் சுமாரான வெற்றியை பெற்றது. மற்ற படங்கள் தோல்வியைத்தான் தழுவின. 'பையா' கூட்டணியுடன் மீண்டும் வெற்றிப் பயணத்தில் இணைவாரா என்பது அறிவிப்பு வந்த பிறகே தெரியும்.