பிரீத்தி அஸ்ராணிக்காக கதையை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக் : கன்னட எழுத்தாளர் கதையை படமாக்கிய கே. பாக்யராஜ் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்தில் எடுக்கப்பட்ட படம் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் பார்வதி நாயர் படம் | மீரா மிதுன் மீதான வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்ய கோர்ட் மறுப்பு | திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் | வா வாத்தியார் : கை கொடுக்காமல் போன கார்த்தி | சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! |

வெற்றிமாறன் இயக்கி உள்ள விடுதலை படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்துள்ளார் சூரி. முதல்பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்தபாகம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. தற்போது கொட்டுக்காளி என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் பிறகு மேலும் சில படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்றார் சூரி. அப்போது தனது ரசிகர் ஒருவரின் தாயார் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தவர் ஒரு ஆட்டோவில் அவரது வீட்டுக்கு சென்று உடல் நலம் விசாரித்து இருக்கிறார். அதன்பிறகு அங்கிருந்து மீண்டும் ஆட்டோவில் தனது வீட்டுக்கு வந்துள்ளார் சூரி. ‛‛என்னுடைய ரசிகரின் அம்மா எனது அம்மா மாதிரி. அதனால்தான் நேரில் உடல் நலம் விசாரிக்க வந்தேன்'' என்று நெகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார் சூரி. அவர் பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.