ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

வெற்றிமாறன் இயக்கி உள்ள விடுதலை படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்துள்ளார் சூரி. முதல்பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்தபாகம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. தற்போது கொட்டுக்காளி என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் பிறகு மேலும் சில படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்றார் சூரி. அப்போது தனது ரசிகர் ஒருவரின் தாயார் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தவர் ஒரு ஆட்டோவில் அவரது வீட்டுக்கு சென்று உடல் நலம் விசாரித்து இருக்கிறார். அதன்பிறகு அங்கிருந்து மீண்டும் ஆட்டோவில் தனது வீட்டுக்கு வந்துள்ளார் சூரி. ‛‛என்னுடைய ரசிகரின் அம்மா எனது அம்மா மாதிரி. அதனால்தான் நேரில் உடல் நலம் விசாரிக்க வந்தேன்'' என்று நெகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார் சூரி. அவர் பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.