மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
புதிய பார்லிமென்ட் கட்டடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கட்டடத்தில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த புதிய பார்லிமென்ட் கட்டடம் மிகப்பெரிய வரவேற்பையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்த புதிய பார்லி., கட்டடத்தின் அழகை விவரிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ‛நம்முடைய அரசியலமைப்பை நிலை நிறுத்தும் மக்களுக்கு ஒரு அற்புதமான புதிய வீடு. இது இந்த மகத்தான தேசத்தில் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்தி பன்முகத்தன்மையை பாதுகாக்கிறது. இது புதிய இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்ற கட்டிடம் என்றாலும் இந்தியாவின் மகிமை என்கிற பழைய கனவை சுமந்து கொண்டிருக்கிறது. ஜெய்ஹிந்த்' என அவர் பதிவிட்டு இருக்கிறார்.
ஷாருக்கானின் இந்த பதிவுக்கு பிரதமர் மோடியும் ஒரு பதில் கொடுத்துள்ளார். அதில், ‛அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டடம் ஜனநாயக வலிமை மற்றும் முன்னேற்றத்தின் சின்னமாக அமைந்திருக்கிறது. இதில் நம்முடைய பாரம்பரியம் மட்டுமின்றி நவீனமும் கலந்து இருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.