நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
'பத்து தல' படத்திற்குப் பிறகு சிலம்பரசன் நடிக்கும் அவரது 48வது படத்தை நடிகர் கமல்ஹாசன் அவரது படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இப்படத்தை இயக்க உள்ளார்.
சரித்திர காலப் படமாக இப்படம் உருவாக உள்ளது. இப்படத்திற்கான அடுத்த கட்ட நகர்வு குறித்து இயக்குனர் தேசிங், சிலம்பரசன் ஆகியோர் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசியுள்ளனர்.
கமல்ஹாசனை சந்தித்தப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “நன்றி கமல்ஹாசன் சார்'' எனப் பதிவிட்டுள்ளார் சிம்பு. சரித்திரப் படத்தில் நடிப்பதற்காக தலைமுடியையும் கொஞ்சம் நீளமாக வளர்த்து வருகிறார் சிம்பு. 'ரத்தமும் பேரும் ஆரம்பம்' என படக்கழுவினர் படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார்கள்.
அடுத்த சில வாரங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.