ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

'பத்து தல' படத்திற்குப் பிறகு சிலம்பரசன் நடிக்கும் அவரது 48வது படத்தை நடிகர் கமல்ஹாசன் அவரது படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இப்படத்தை இயக்க உள்ளார்.
சரித்திர காலப் படமாக இப்படம் உருவாக உள்ளது. இப்படத்திற்கான அடுத்த கட்ட நகர்வு குறித்து இயக்குனர் தேசிங், சிலம்பரசன் ஆகியோர் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசியுள்ளனர்.
கமல்ஹாசனை சந்தித்தப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “நன்றி கமல்ஹாசன் சார்'' எனப் பதிவிட்டுள்ளார் சிம்பு. சரித்திரப் படத்தில் நடிப்பதற்காக தலைமுடியையும் கொஞ்சம் நீளமாக வளர்த்து வருகிறார் சிம்பு. 'ரத்தமும் பேரும் ஆரம்பம்' என படக்கழுவினர் படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார்கள்.
அடுத்த சில வாரங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.