எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
பாலிவுட்டில் பிரபல இயக்குனரும், நடிகருமாக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். தமிழில் இமைக்கா நொடிகள் என்கிற படத்தில் வில்லனாக நடித்தவர் இவர்தான். இவர் இயக்கியுள்ள கென்னடி என்கிற திரைப்படம் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக கலந்து கொண்டது. இந்த படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் ராகுல் பட் என்பவர் நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அனுராக் காஷ்யப் முதலில் அழைத்தது நடிகர் விக்ரமை தான்.
இதுகுறித்து தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள அனுராக் காஷ்யப், "இந்த முன்னாள் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் இந்த கதையை கூறினேன். அதற்காக விக்ரமின் ஒரிஜினல் பெயரான கென்னடி என்கிற பெயரையே இந்த படத்திற்கு டைட்டிலாகவும் வைத்தேன்" என்று கூறியுள்ளார். ஆனால் விக்ரமிடமிருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்காததால் தான் அவருக்கு பதிலாக நடிகர் ராகுல் பட்டை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளாராம் அனுராக் காஷ்யப்.