பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி |

பாலிவுட்டில் பிரபல இயக்குனரும், நடிகருமாக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். தமிழில் இமைக்கா நொடிகள் என்கிற படத்தில் வில்லனாக நடித்தவர் இவர்தான். இவர் இயக்கியுள்ள கென்னடி என்கிற திரைப்படம் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக கலந்து கொண்டது. இந்த படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் ராகுல் பட் என்பவர் நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அனுராக் காஷ்யப் முதலில் அழைத்தது நடிகர் விக்ரமை தான்.
இதுகுறித்து தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள அனுராக் காஷ்யப், "இந்த முன்னாள் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் இந்த கதையை கூறினேன். அதற்காக விக்ரமின் ஒரிஜினல் பெயரான கென்னடி என்கிற பெயரையே இந்த படத்திற்கு டைட்டிலாகவும் வைத்தேன்" என்று கூறியுள்ளார். ஆனால் விக்ரமிடமிருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்காததால் தான் அவருக்கு பதிலாக நடிகர் ராகுல் பட்டை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளாராம் அனுராக் காஷ்யப்.