நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

பாலிவுட்டில் பிரபல இயக்குனரும், நடிகருமாக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். தமிழில் இமைக்கா நொடிகள் என்கிற படத்தில் வில்லனாக நடித்தவர் இவர்தான். இவர் இயக்கியுள்ள கென்னடி என்கிற திரைப்படம் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக கலந்து கொண்டது. இந்த படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் ராகுல் பட் என்பவர் நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அனுராக் காஷ்யப் முதலில் அழைத்தது நடிகர் விக்ரமை தான்.
இதுகுறித்து தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள அனுராக் காஷ்யப், "இந்த முன்னாள் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் இந்த கதையை கூறினேன். அதற்காக விக்ரமின் ஒரிஜினல் பெயரான கென்னடி என்கிற பெயரையே இந்த படத்திற்கு டைட்டிலாகவும் வைத்தேன்" என்று கூறியுள்ளார். ஆனால் விக்ரமிடமிருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்காததால் தான் அவருக்கு பதிலாக நடிகர் ராகுல் பட்டை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளாராம் அனுராக் காஷ்யப்.