ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கிறார் விஜய். இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 20 ஆண்டுகளுக்கு பின் விஜய்யின் படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்.
இந்தப்படம் எந்தமாதிரியான கதையில் உருவாகும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். இது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ஒரு முழு நீள அரசியல் படமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்தவுடன் அடுத்த 6 மாதங்கள் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் களமிறங்குகிறார் என்கிறார்கள். சமீபகாலமாக விஜய் அரசியல் தொடர்பான விஷயங்களில் தீவிரம் காட்டுகிறார். முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் அவர்களது சிலைக்கு மாவட்டம் தோறும் அவரது மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அடுத்தாண்டு பார்லிமென்ட் தேர்தல் வருவதால் அதை நகர்த்தி விஜய் அரசியல் பணிகளில் இறங்குகிறார் என கூறப்படுகிறது.