அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் |
ஜெயிலர் படத்தை முடித்துவிட்ட ரஜினிகாந்த் அதையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து மீண்டும் லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது 170வது படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி. இப்படத்தை சூர்யா நடித்த ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் ரஜினி 170வது படத்தின் கதை குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்த படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியாக நடிப்பதாகவும், போலி என்கவுண்டர் கதையில் இப்படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் தான் இயக்கிய ஜெய்பீம் படத்தை போலவே இந்த படத்தையும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் இயக்குகிறார் ஞானவேல்.