‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
ஜெயிலர் படத்தை முடித்துவிட்ட ரஜினிகாந்த் அதையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து மீண்டும் லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது 170வது படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி. இப்படத்தை சூர்யா நடித்த ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் ரஜினி 170வது படத்தின் கதை குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்த படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியாக நடிப்பதாகவும், போலி என்கவுண்டர் கதையில் இப்படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் தான் இயக்கிய ஜெய்பீம் படத்தை போலவே இந்த படத்தையும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் இயக்குகிறார் ஞானவேல்.