டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

ஜெயிலர் படத்தை முடித்துவிட்ட ரஜினிகாந்த் அதையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து மீண்டும் லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது 170வது படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி. இப்படத்தை சூர்யா நடித்த ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் ரஜினி 170வது படத்தின் கதை குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்த படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியாக நடிப்பதாகவும், போலி என்கவுண்டர் கதையில் இப்படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் தான் இயக்கிய ஜெய்பீம் படத்தை போலவே இந்த படத்தையும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் இயக்குகிறார் ஞானவேல்.