7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். கேஜிஎப் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் அவருடன் மாளவிகா மோகனன், பார்வதி மேனன், பசுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடிய மாளவிகா மோகனன், தங்கலான் படத்தில் விக்ரமுடன் நடித்து வரும் அனுபவம் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், இந்த தங்கலான் படத்தை பொருத்தவரை விக்ரம் இல்லாமல் இந்த பயணத்தை என்னால் நினைத்து பார்க்க முடியாது. ஒவ்வொரு காட்சிகளிலும் அவர் எனக்கு உதவியாக இருந்துள்ளார். தான் மட்டுமின்றி தன்னைச் சுற்றி இருக்கும் அனைவருமே நன்றாக நடிக்க வேண்டும் என்ற அக்கறை கொண்டவர். அதோடு தன்னுடன் நடிப்பவர்களை தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி எப்போதும் கலகலப்பாக காமெடியாக பேசிக் கொண்டிருப்பார் விக்ரம் என்று கூறி இருக்கும் மாளவிகா மோகனன், விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதால் தற்போது தங்கலான் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் பூரண குணமடைந்ததும் மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார்.