கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் |

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். கேஜிஎப் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் அவருடன் மாளவிகா மோகனன், பார்வதி மேனன், பசுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடிய மாளவிகா மோகனன், தங்கலான் படத்தில் விக்ரமுடன் நடித்து வரும் அனுபவம் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், இந்த தங்கலான் படத்தை பொருத்தவரை விக்ரம் இல்லாமல் இந்த பயணத்தை என்னால் நினைத்து பார்க்க முடியாது. ஒவ்வொரு காட்சிகளிலும் அவர் எனக்கு உதவியாக இருந்துள்ளார். தான் மட்டுமின்றி தன்னைச் சுற்றி இருக்கும் அனைவருமே நன்றாக நடிக்க வேண்டும் என்ற அக்கறை கொண்டவர். அதோடு தன்னுடன் நடிப்பவர்களை தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி எப்போதும் கலகலப்பாக காமெடியாக பேசிக் கொண்டிருப்பார் விக்ரம் என்று கூறி இருக்கும் மாளவிகா மோகனன், விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதால் தற்போது தங்கலான் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் பூரண குணமடைந்ததும் மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார்.