ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

நாயகன், கானல் நீர், பெண் சிங்கம் உட்பட பல படங்களில் நடித்தவர் ஜே.கே.ரித்தீஷ். இவர் ராமநாதபுரத்தில் இருந்து திமுக எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு மாரடைப்பால் தனது 46 வயதிலேயே மரணம் அடைந்தார் ஜே.கே. ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி என்பவர் காரைக்குடியில் நகை தொழில் வியாபாரம் செய்து வரும் திருச்செல்வம் என்பவரிடத்தில் 60 லட்சம் ரூபாய்க்கு தங்க, வைர நகைகளை வாங்கி இருக்கிறார். அதற்கான பணத்தை கொடுக்காமல் இருபது லட்சத்திற்கான மூன்று காசோலைகளை வழங்கியுள்ளார். ஆனால் அந்த காசோலையில் பணம் இல்லாமல் திரும்பி வந்திருக்கிறது. அதன் பிறகும் சொன்னபடி அந்த பணத்தை அவர் தராததால் ஜோதீஸ்வரி மீது காரைக்குடி நீதிமன்றத்தில் திருச்செல்வம் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜோதீஸ்வரிக்கு ரூபாய் 60 லட்சம் அபராதமும், ஆறு மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.