விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
சின்னத்திரை நடிகர் சதீஷ் விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி தொடரில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். ஹீரோ, வில்லன், காமெடி என ஒட்டுமொத்த உருவமாக கோபி ரோல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் கச்சிதமாக பெர்பார்மன்ஸ் செய்து வரும் சதீஷுக்கு ரசிகர் பட்டாளமும் அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன் சதீஷ், பாக்கியலெட்சுமி சீரியலை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்தார். அதை உறுதிப்படுத்தும் வகையில் மீண்டும் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால் வருத்தமடைந்த ரசிகர்கள் சதீஷை மீண்டும் கோபி கதாபாத்திரத்தில் தொடரும்படி வேண்டுகோள் வைத்து வந்தனர்.
சக நடிகரான விஷாலும் 'என் அப்பாவை போகவிடமாட்டேன்' என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது வீடியோ வெளியிட்டுள்ள சதீஷ், 'நான் உணர்ச்சிவசப்பட்டு விலகுவதாக கூறிவிட்டேன். எனக்குள் பெர்சனலாக இருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிட்டது. இனி நான் கோபியாக பாக்கியலெட்சுமி சீரியலில் தொடர்ந்து நடிப்பேன்' என்று கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.