22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் பத்து தல. இந்த படத்தை கிருஷ்ணா இயக்கியிருந்தார். அந்த படம் திரைக்கு வந்தபோது பத்து தல இரண்டாம் பாகத்தை அடுத்து கிருஷ்ணா இயக்குவார் என்ற தகவல்களும் வெளியாகின. ஆனால் தற்போது பத்து தல படத்தின் இரண்டாம் பாகம் அல்லாமல் வேறு ஒரு படத்தை இயக்கும் பணிகளில் அவர் இறங்கி இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்து நான் இயக்கும் படத்தை ராமன் தேடிய சீதை, சாருலதா, ஹாய் சினாமிகா உள்பட பல படங்களை தயாரித்த குளோபல் ஒன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. அப்படத்திற்கான கதை விவாதங்கள் முடிந்து விட்ட நிலையில் விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.
இப்படி கிருஷ்ணா தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து கிருஷ்ணாவின் அடுத்த படம் குறித்து வெளியான செய்தியை தனது ட்விட்டரில் பதிவிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். மேலும் பத்து தல படத்திற்கு ரஹ்மான் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கும் அவர்தான் இசையமைக்கிறாரா? இல்லையா? என்பது குறித்த தகவல் விரைவில் தெரியவரும்.