பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன், அயலான் ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ள நிலையில் தற்போது கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் தனது 21 வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி உள்ளது. இதுதொடர்பான வீடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பூஜையில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராஜ்குமார் பெரியசாமி, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கமல்ஹாசன் முன்நின்று படப்பிடிப்பை கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.