பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் |
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்த பாக்கியலெட்சுமி தொடரில் கதாநாயகனாக நடித்து வந்த சதீஷ் அண்மையில் விலகுவதாக அறிவித்தார். தற்போது அவரை தொடர்ந்து இரண்டாவது நாயகியாக நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டியும், ராதிகா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பல ரசிகர்களின் கேள்விகளுக்கு ரேஷ்மா பதிலளித்தார். அப்போது ஒருவர் சதீஷ் சீரியலை விட்டு விலகுவது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்த ரேஷ்மா 'சதீஷ் விலகியது பற்றி உறுதியாக தெரியாது. அடுத்த ஷெட்யூலில் நான் இருந்தால் உங்களுக்கு சொல்கிறேன்' என்று கூறியுள்ளார். இதன்மூலம் சதீஷை போல் ரேஷ்மாவும் சீரியலிலிருந்து விலகிவிட்டாரா? பாக்கியலெட்சுமி சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.