முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் |
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்த பாக்கியலெட்சுமி தொடரில் கதாநாயகனாக நடித்து வந்த சதீஷ் அண்மையில் விலகுவதாக அறிவித்தார். தற்போது அவரை தொடர்ந்து இரண்டாவது நாயகியாக நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டியும், ராதிகா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பல ரசிகர்களின் கேள்விகளுக்கு ரேஷ்மா பதிலளித்தார். அப்போது ஒருவர் சதீஷ் சீரியலை விட்டு விலகுவது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்த ரேஷ்மா 'சதீஷ் விலகியது பற்றி உறுதியாக தெரியாது. அடுத்த ஷெட்யூலில் நான் இருந்தால் உங்களுக்கு சொல்கிறேன்' என்று கூறியுள்ளார். இதன்மூலம் சதீஷை போல் ரேஷ்மாவும் சீரியலிலிருந்து விலகிவிட்டாரா? பாக்கியலெட்சுமி சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.