தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

தமிழ் சினிமாவில் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான சங்கம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இதன் தலைவராக தேனாண்டாள் முரளி உள்ளார். இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று (ஏப்ரல் 30) காலை 9 மணிக்கு துவங்கிய 5 மணிக்கு முடிந்தது.
சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள இந்தத் தேர்தல் மூலம் தலைவர், 2 துணைத் தலைவர், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தலைவர் பதவிக்கு தற்போது பதவியில் உள்ள முரளி ராமசாமி, மற்றொரு அணியில் இருந்து மன்னன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். துணை தலைவர் பதவிக்கு அர்ச்சனா கல்பாத்தி, கலைப்புலி சேகரன், ராஜேஸ்வரி வேந்தன், தமிழ்குமரன் மற்றும் விடியல் ராஜூ; செயலர் பதவிக்கு பி.எல்.தேனப்பன், கமீலாநாசர், எஸ்.கதிரேசன், கே.கதிரேசன், ராதாகிருஷ்ணன் போட்டியிடுகின்றனர். பொதுக்குழு உறுப்பினர்களாக, 26 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்; இதற்கு, நடிகை தேவயானி உட்பட, 77 பேர் போட்டியில் உள்ளனர்.

இந்தத் தேர்தலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகிய இருவரும் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினர். இந்த தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாக்யராஜ், பூர்ணிமா, சுஹாசினி, அமீர், சசிகுமார், ஆர்.கே.செல்வமணி, தாணு, ராதாரவி, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், தேவயானி, ஏ.ஆர்.முருகதாஸ், அமீர், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் தங்களின் ஓட்டுகளை பதிவு செய்தனர். ஓட்டுகள் நாளை காலை எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.