தமிழக அரசு விருது பெற்ற சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், கீர்த்தி சுரேஷ் | சினிமாவை போன்று விளம்பரங்களிலும் சம்பாதிக்கும் தமன்னா | நானியின் ‛தி பாரடைஸ்' படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் | சிக்கிரி சிக்கிரி பாடலுக்கு சொந்தமாக நடன அசைவை வெளிப்படுத்திய ராம்சரண் | துல்கர் சல்மானின் 41வது படத்தில் இணைந்த ஜெகபதிபாபு | மூத்த மகனும் டைரக்ஷனில் இறங்குகிறார் ; பிரித்விராஜின் அம்மா தகவல் | படப்பிடிப்பில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய மிருணாள் தாக்கூர் | 24வது வருட காதலர் தினம் : ஜெனிலியாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கணவர் | பிரேமம் ரீ ரிலீஸ் : முதல் வரவேற்பை இப்போதும் பெறுமா? | திருமண வீடியோ உரிமை : வேண்டாமென்று மறுத்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா? |

சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வரும் இயக்குனர் சுதா கொங்கரா, அடுத்தபடியாக ரஜினியை சந்தித்து ஒரு கதை கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ரஜினி, இதையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்தை முடித்ததும் ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில், தற்போது பெங்களூருவில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் தங்கி உள்ளார் ரஜினிகாந்த். அங்கு அவரை கேஜிஎப் படத்தின் தயாரிப்பாளர் உடன் நேரில் சென்று சந்தித்திருக்கிறார் இயக்குனர் சுதா. அப்போது கேஜிஎப் பட நிறுவனம் தயாரிப்பில் தான் இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதற்கு அவர் கதை சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக லால் சலாம் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி, அதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.