ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வரும் இயக்குனர் சுதா கொங்கரா, அடுத்தபடியாக ரஜினியை சந்தித்து ஒரு கதை கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ரஜினி, இதையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்தை முடித்ததும் ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில், தற்போது பெங்களூருவில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் தங்கி உள்ளார் ரஜினிகாந்த். அங்கு அவரை கேஜிஎப் படத்தின் தயாரிப்பாளர் உடன் நேரில் சென்று சந்தித்திருக்கிறார் இயக்குனர் சுதா. அப்போது கேஜிஎப் பட நிறுவனம் தயாரிப்பில் தான் இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதற்கு அவர் கதை சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக லால் சலாம் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி, அதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.