கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா | தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' | பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா | பிளாஷ்பேக்: குழந்தை நட்சத்திரமாக நடித்த பத்மா சுப்பிரமணியம் |
ராதிகா சரத்குமார் தயாரிப்பில் அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே கிழக்கு வாசல் தொடர் உருவாகி வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகர், ராதிகா, ரேஷ்மா, அஸ்வினி, சஞ்சீவ் வெங்கட், அருண்குமார் ராஜன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த சீரியலில் நடிக்க கமிட்டாகியிருந்தனர். நடிகர் சஞ்சீவ் வெங்க்ட தான் ஹீரோவாக நடிக்க இருந்தார். சீரியலுக்கான ஷூட்டிங்கும் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது.
இந்நிலையில், நடிகர் சஞ்சீவ் கிழக்கு வாசல் தொடரிலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், 'நான் கிழக்கு வாசல் தொடரிலிருந்து அதிகாரபூர்வமாக விலகிவிட்டேன் என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். கிழக்கு வாசல் தொடரில் முத்து கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. ராதிகா சரத்குமார் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் சாரை மிஸ் செய்கிறேன். அடுத்த ப்ராஜெக்டில் உங்களை சந்திக்கிறேன் நன்றி' என்று அறிவித்திருந்தார். இதனால், சஞ்சீவின் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.