ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மாநாடு, பத்துதல, வெந்து தணிந்தது காடு என தொடர் வெற்றிகளால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சிம்பு. வெந்து தணிந்தது காடு படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஒரு பல்கலை கழகத்தில் நடந்தபோதும், பத்துதல பாடல் வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடந்தபோதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார். இது சிம்புவிற்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக தனது ரசிகர்மன்ற மாவட்ட நிர்வாகிகளை தனது வீட்டுக்கு அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுக்கு பிரியாணி விருந்தளித்த சிம்பு தன் கையாலேயே ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறினார். இதனால் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
ரசிகர் மன்ற நிர்வாகிகளிடையே பேசிய சிம்பு “மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்துங்கள், மக்களுக்கு நிறைய சமூக சேவைகள் செய்து அவர்களின் நன்மதிப்பை பெறுங்கள். அப்போதுதான் நமது எதிர்கால திட்டமிடலுக்கு அது சாதகமாக இருக்கும். பட வெளியீட்டின்போது எந்த பணி செய்தாலும் பாதுகாப்பை முக்கியமாக கருதுங்கள்” என்றார்.