மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களின் ஒருவர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார். விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை தயாரித்த இவர் தற்போது மீண்டும் விஜய்யை வைத்து லியோ படத்தை தயாரிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகிறது.
சினிமா தவிர்த்து பிஸ்னஸ் மேனாக பல துறைகளில் வலம் வருகிறார் லலித். இந்நிலையில் இப்போது சென்னை வண்டலூர் அருகில் ஐந்து ஸ்கிரீன் கொண்ட மல்டிபிலக்ஸ் திரையரங்கம் ஒன்றை உருவாக்கி வருகிறார். அடுத்த வருடம் இந்த திரையரங்கை திறக்கவுள்ளார் என கூறப்படுகிறது.




