இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி பெற்று 500 கோடி வரை வசூலித்தது. தற்போது அதன் 2ம் பாகம் வெளிவர இருக்கிறது. இதுவும் 500 கோடி வரை வசூலிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகத்தில் உள்ள லைக்கா அஜித் படம் உள்ளிட்ட பல படங்களை புதிதாக தயாரிக்கிறது. ஏற்கெனவே பெரிய பட்ஜெட்டில் இந்தியன் 2 படத்தை தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியீட்டை முன்னிட்டு லைகா நிறுவனத்தின் சேர்மன் சுபாஷ்கரன் இந்தியா வந்துள்ளார். அவரது முன்னிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு லைகா நிறுவனம் சார்பில் 50 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. இதனை தற்போதைய சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி, துணை தலைவர் கதிரேசன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.