'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
நடிகர் தனுஷ் இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். பீரியட் படமாக உருவாகும் இந்தப்படம் பிரமாண்டமாய் உருவாகிறது. இதையடுத்து தனது 50-வது படத்தை தனுஷே இயக்கி, நடிக்கவுள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதுதவிர மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதுதவிர தெலுங்கிலும் இரண்டு படங்களில் அவர் நடிக்க வேண்டி உள்ளது. இதற்கான அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகின.
இந்நிலையில் மற்றுமொரு புதிய படத்தை ஒப்பந்தம் செய்துள்ளாராம் தனுஷ். இந்த படத்தை சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவு இயக்க உள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் இப்படத்தை தயாரிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.