மூன்று மாதம் வெயிலில் நின்று கறுப்பானேன் - 'கொட்டுக்காளி' சாய் அபிநயா | நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை : அஜித் நெகிழ்ச்சி | ''எங்களுக்கு 'வாழ்க' சொன்னது போதும்! நீங்க எப்ப வாழப்போறீங்க...?'': துபாயில் அஜித் பேட்டி | என் குணம் இப்படி தான்... ஆசையை சொன்ன அதிதி ஷங்கர் | துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் | வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய 'விடுதலை': சூரி நெகிழ்ச்சி | 'ஜெயம்' வேண்டாம்; ரவி போதும்: அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு | ராம் பொத்தினேனி படத்தில் மோகன்லால்? | மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா! | ஜனவரி 17ல் தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' |
பிரபல பாலிவுட் காமெடி நடிகர் கியாலி சஹாரன். 'சிங் இஸ் எ கிங்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பிசியாக இருப்பவர். அதோடு பல சமூக சேவைகளும் செய்து வருகிறவர். இவர் மீது தற்போது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
25 வயது இளம் பெண் ஒருவர் ராஜஸ்தானின் மானசரோவர் போலீஸ் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் நடிகர் கியாலி சஹாரன் வேலை வாங்கித் தருவதாக இரண்டு பெண்களை ஓட்டலுக்கு அழைத்ததாகவும், அந்த ஓட்டலில் அழைக்கப்பட்ட பெண்களுக்கு தனித்தனி அறை எடுத்து கொடுத்து அங்கு இன்டர்வியூ என்ற பெயரில் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும், அதில் ஒரு பெண் தப்பி ஓடிவிட்டதாகவும், மாட்டிக் கொண்ட தான் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அந்த பெண் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதையடுத்து கியாலி சஹாரன் மீது போலீசார் பாலியல் பலாத்கார பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கியாலி சஹாரன் கைதாகலாம் என்று தெரிகிறது.